Traffic Awareness Campaign
"விபத்தில்லா தினமே நமது கனவு" என்ற கருபொருளை முன்வைத்து VR மற்றும் தோழன் இயக்கத்துடன் இணைந்து, நம் பாரதி சரணர்கள் மற்றும் நம் இயக்கத்தை சேர்ந்த தன்னார்வமுள்ள நண்பர்கள் கடந்த 18.05.2014 மாலை 04.30 முதல் 06.30 வரை திருவான்மியூர் சாலையில் விழிப்புணர்வு நடத்தினோம். ("சாலை விதிகளை மதிப்போம் வீதிகளை கடப்போம்).
ஒட்டு மொத்த சென்னையோட போக்குவரத்து நெரிசலையோ அல்லது ஒட்டுமொத்த தேசத்தின் போக்குவரத்து நெரிசலையோ நாம திருத்தவேண்டாம், ஆனால் நம்மால் உண்டாகும் நெரிசலுக்கு நாமே பொறுப்பு என்பதை உணர்த்தவும்...
நாட்டின் எல்லைக்கோட்டில் இருக்கிற இராணுவ வீரன் "எல்லை கோட்டிற்கு" மரியாதை செலுத்துவது போல நாட்டின் மீது பற்றுகொண்ட நாம் வாகனங்களை சாலையில் உள்ள "எல்லைக்கோட்டில்(STOP LINE)" நிறுத்துவதும் நமது நாட்டிற்கு பெருமை.
நாங்கள் கடந்த விழிப்புணர்வில் 2 மணிநேரம் எந்த ஒரு வாகனத்தையும் "எல்லைக்கோட்டில்(STOP LINE)" முன் நிருதவிடாமல் சாதனை படைத்தோம். ஒரு இயல்பன விஷியத்தை வலியுறுத்தி செய்தால் அது சாதனை தான்.. அது இயல்பாக இருக்க வேண்டும் எனபது எங்கள் நோக்கம்.
நாங்கள் பெருமை அடைகிறோம். .. மாற்றத்தின் முதல் அடி நமதாகும் போது