
Swach Bharat & World Volunteers Day 2nd Day program
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை மற்றும் சாரணர்படை சார்பில் தூய்மை பாரதம் நிகழ்வும் ,உலக தன்னார்வலர் தினமும் கொண்டாடப்பட்டன.
அதனையொட்டி முதல் நாள் பள்ளி வளாகத்திலும் ,இரண்டாம் நாள் பண்ணுருட்டி இரயில் நிலையத்திலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.பள்ளித் தலைமையாசிரியர் திரு.பூவராகமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
உதவித் தலைமையாசிரியை துருமதி அமலி அவர்கள் முன்னிலை வகித்தார். என்.சி.சி.அலுவலர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.
என்.எஸ்.எஸ் அலுவலர் மோகன்குமார் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் பண்ணுருட்டி நகர் மன்ற ஆணையர் திரு .வெங்கடபதி அவர்கள் கலந்துகொண்டு தூய்மைக்கான உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர்.நிகழ்ச்சியின் நிறைவாக சாரண ஆசிரியர் முத்துக்குமரன் அவர்கள் நன்றி கூறினார்.தேசிய மாணவர் படை மாணவர்கள் 60 பேரும் சாரணர்கள் 45 பேரும் திரி சாரணர்கள் 10 பேரும் என 115 மாணவர்கள் 2 ஆசிரியர்களின்
(115+2 =117) மேற்பார்வையில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர்.
World Volunteers Day #WVD2018 ,the Second Day Service #Clean India Project # Swach Bharat , Panruti Railway station by the Gandhiji Scout Troop of GHSS ,Panruti .The Commissioner of Panruti Municipality & The Station Master witnessed it.The Municipolity Commissioner lead to take Pledge on Swach Bharat .